search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
    X

    108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரிதாவை மீட்டு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
    • அப்போது சரிதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்கா, கடம்பூர் மலை கிராமம், குன்றி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன். தொழிலாளி. இவரது மனைவி சரிதா (31). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சரிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    இது குறித்து அறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சை அழைத்தனர். 108 ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரிதாவை மீட்டு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    108 ஆம்புலன்ஸ் குன்றி கடம்பூர் பாதையில் அஞ்சனை பிரிவு அருகே வந்தபோது சரிதாவுக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்துகொண்ட 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு சரிதாவுக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது சரிதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    பின்னர், தாயும்-சேயும் கடம்பூர் அரசு ஆரம்ப நிலைய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் குமரேசன் மற்றும் வாகன ஓட்டுனர் ராஜ்குமார் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினார்.

    Next Story
    ×