தி.மு.க. கையெழுத்து இயக்கத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் - ராஜா எம்.எல்.ஏ. பேச்சு

50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெற்று இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும்.நீட் தேர்வு என்பது திராவிட கொள்கைக்கு ஏற்பட்டுள்ள நோய் என ராஜா எம்.எல்.ஏ. பேசினார்.
சங்கரன்கோவிலில் மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடந்த போது எடுத்த படம்.  
சங்கரன்கோவிலில் மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடந்த போது எடுத்த படம்.  
Published on

சங்கரன்கோவில்:

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி மருத்துவர் அணி சார்பாக நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, யூ.எஸ்.டி.சீனிவாசன், பரமகுரு, மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், வர்த்தக அணி இணை செய லாளர் முத்துச்செல்வி, மாவட்ட துணை செயலா ளர்கள் ராஜதுரை, புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ் வரவேற்றார். மருத்துவ அணி மாவட்ட அமைப்பா ளர் டாக்டர் மணிகண்டன் தொகுத்து வழங்கினார்.

இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசுகையில், நீட் தேர்வை ரத்து செய்வதற்கு இளைஞ ரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெற்று இந்திய குடியரசு தலைவ ருக்கு அனுப்ப வேண்டும் என அறிவித்துள்ளார்.

அதன்படி தென்காசி வடக்கு மாவட்டத்தில் இளைஞர் அணி, மருத்துவர் அணி, மாணவர் அணி மட்டுமல்லாமல் அனைத்து சார்பு அணிகளும் இணைந்து இந்த கையெழுத்து இயக்கத்தை புரட்சி இயக்கமாக மாற்றி தென்காசி வடக்கு மாவட்டத் தில் இருந்து அதிகமான அளவில் கையெழுத்துக் களை பெற்று அனுப்ப வேண்டும்.

நீட் தேர்வு என்பது திராவிட கொள்கைக்கு ஏற்பட்டுள்ள நோய். இதனால் ஏழை, எளிய மக்கள் மருத்துவ படிப்பு படிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

எனவே இந்த நீட் தேர்வை ரத்து செய்யும் இந்த கையெழுத்து இயக்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழ் நாட்டில் அதிக அளவு மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்- அமைச்சர் கலைஞர் கருணாநிதி.

ஆனால் தமிழக மாண வர்கள் மருத்துவ படிப்புக்கு சீட் கிடைக்காமல் இந்த நீட் தேர்வினால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசி னார்.

தொடர்ந்து பரப்பரை யாளர் சுந்தரவள்ளி கருத்துரை வழங்கினார். தி.மு.க. இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சங்கரன்கோவிலிலும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணி சாமி, பேரூர் செயலா ளர்கள், நகராட்சி சேர்மன் கள் சங்கரன் கோவில் உமா மகேஸ்வரி சரவணன், புளியங்குடி விஜயா சவுந்தர ராஜன், அறங்காவலர் குழு உறுப்பினர் முப்புடாதி, வக்கீல் ஜெயக்குமார், வக்கீல் அணி தலைவர் முத்துராமலிங்கம், மாவட்ட சார்பு அணி அமைப்பா ளர்கள் கே.எஸ்.எஸ். மாரி யப்பன், சரவணன், சதிஷ், முத்துலட்சுமி, விளை யாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கேபிள் கணேசன், சுற்றுச் சூழல் அணி துணை அமைப் பாளர் சிவகிரி சேதுசுப்ர மணியன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணைத்தலைவர் முருக ராஜ், ஜெயகுமார், ஜான், கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட மாணவர் அணி அமைப்பா ளர் உதயகுமார் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com