search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி - ஹில்டன் பள்ளி மாணவர்கள் சாதனை
    X

    வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை படத்தில் காணலாம்.


    மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி - ஹில்டன் பள்ளி மாணவர்கள் சாதனை

    • தென்காசி மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் பாவூர்சத்திரத்தில் உள்ள டி.பி.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • முதலிடம் பிடித்த 16 பேரும் மாநில அளவில் நடைபெறும் குத்து சண்டை போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் பாவூர்சத்திரத்தில் உள்ள டி.பி.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஆசில் முகமது, முகமது இர்ஃபான் பதான்,ஜெபின், ராஜவேல், முருக அஷ்வந்த், அர்ஷத்,மகிமா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். செல்டன் சார்லஸ், சுப்புலட்சுமி ஆகியோர் 2-ம் இடத்தை பிடித்தனர். 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தீனதயாளன், கவின் ராமலிங்கம், கார்த்திகா, இஸ்ரா, ஜெனிஸ்ஷா ஆகியோர் முதலிடமும், முகமது யூசுப் 2-ம் இடமும், குகேஷ் 3-ம் இடமும் பிடித்தனர். 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஸ்ரீ மோகனசுந்தர், மெல்வின் செல்வ ஆண்டோ, முகமது யாசிர், நவீன், பிரவீன் குமார் ஆகியோர் முதலிடமும், கவுதம் 2-ம் இடத்தையும் பிடித்தனர்.

    முதலிடம் பிடித்த 16 பேரும் மாநில அளவில் நடைபெறும் குத்து சண்டை போட்டிக்கு தகுதி பெற்றனர். சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளியின் தாளாளர் ஆர்.ஜே.வி.பெல் செயலாளர் கஸ்தூரிபெல், பள்ளி முதல்வர் ராபர்ட் பென் மற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள் பாராட்டினர்.


    Next Story
    ×