தீப்பாய்ந்தாள் அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

1000-த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர்.
பக்தர் ஒருவர் இரு குழந்தைகளையும் சுமந்து கொண்டு தீ மிதித்தார்.
பக்தர் ஒருவர் இரு குழந்தைகளையும் சுமந்து கொண்டு தீ மிதித்தார்.
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை காவி ரிக்கரையில் அமைந்துள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் கோவிலில் 131-வது ஆண்டாக தீமிதி திருவிழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, கூறைநாடு காக்கும் பிள்ளையார் கோயிலிருந்து பக்தர்களுக்கு விரதமிருந்து அலகு காவடி, சக்தி கரகம், சிவப்பு மஞ்சள் உடை உடுத்தி மேளதாள வாத்தியங்கள் முழங்க காளிஆட்டத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியே வீதிஉலாவாக கோயிலை வந்தடைந்தனர்.

கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை 1000-த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதில் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவில் மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர்.

கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை செங்கமேட்டு தெரு நாட்டாமை ஞானசேகரன், பொருளாளர் செல்வம், கோயில் நிர்வாகிகள் லட்சும ணன், வெங்கட்ராமன், மற்றும் விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com