search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே  பெண் ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல்
    X

    தியாகதுருகம் அருகே பெண் ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல்

    • வெள்ளையன் நிலத்திற்கு அருகே பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டது.
    • ரவி மனைவி செல்வி ஆகியோர் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படு கிறது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் மனைவி செந்தமிழ் செல்வி (வயது 40) ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார். கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் (43) நிலத்திற்கு அருகே பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டது. இதனால் வெள்ளையன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவ்வப் ேபாது செந்தமிழ் செல்வியை திட்டியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டு இருந்த செந்தமிழ்செல்வியை வெள்ளை யன், அவரது சகோதரர்கள் பழனி, மாது, நாகராஜ் மற்றும் அவரது உறவினர்கள் பெரியசாமி மகன் கட்டிமுத்து, ரவி மனைவி செல்வி ஆகியோர் திட்டி, தாக்கி கொலை மிரட் டல் விடுத்ததாக கூறப்படு கிறது. இதுகுறித்து செந்தமிழ் செல்வி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ் குமார் வழக்கு பதிவு செய்து வெள்ளை யன், நாகராஜ் ஆகியோரை கைது செய்தார். மற்றவர்களை தேடி வரு கிறார்.

    Next Story
    ×