search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரே நாளில் மேலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு
    X

    ஒரே நாளில் மேலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதையடுத்து ஒரே நாளில் மேலும் 20 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
    • நேற்று முன்தினம் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

    வேகமாக பரவும் கெரோனா

    சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் 20 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

    ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 86 பேரில் 5 பேர் குணமாகினர். தற்போது 101 பேர் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த மே மாதம் வரை கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் படிப்படியாக கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.

    தற்போது சேலத்தில் தொற்று அதிகரித்து வருவதால் இனி வரும் நாட்களில் பரிசோதனையை அனைவருக்கும் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் முக கவசம் அணியாதவர்களுக்கு அபாராதம் விதிக்கப்பட உள்ளது.

    பொதுமக்கள் கொேரானா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடை பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×