search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் பா.ஜனதாவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    பாவூர்சத்திரத்தில் பா.ஜனதாவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    • கல்லூரணி பஞ்சாயத்து அலுவலகம் அருகே பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • திப்பணம்பட்டி, கீழப்பாவூர் உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தென்காசி:

    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைபடி வாக்குறுதி களை நிறைவேற்றக்கோரி யும், மணல் மற்றும் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்தவும், டாஸ்மாக் கடைகளை மூடுவது, கஞ்சா, கள்ளச்சா ராயம் விற்பனையை அறவே ஒழித்திடக் கோரு வது, ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்டுதல், உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாவூர்சத்திரத்தில் உள்ள கல்லூரணி பஞ்சா யத்து அலுவலகம் அருகே பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் ஆறுமுகம் என்ற முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலா ளர் அருள் செல்வன் கண்டன உரையாற்றினார்.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராஜ், குமரேசன், கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ், மாவட்ட செயலாளர் கார்மேகநாதன், கீழப்பாவூர் தொழில் பிரிவு ஒன்றிய தலைவர் செல்வராஜ், வர்த்தக பிரிவு செயலாளர் பேட்டை முருகன், உள்ளாட்சி பிரிவு ஒன்றிய தலைவர் கோபிநாத் என்ற கடல், உள்ளாட்சி பிரிவு செயலாளர் வெல்டிங் தங்கம், சக்தி கருப்பையா, சிவன் மகளிர் அணி அமுதா, சீதா, இசக்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திப்பணம் பட்டி, கீழப்பாவூர் உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகல்குளம் கிராமத்தில் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் சுரேஷ் முருகன், கிழக்கு ஒன்றிய செயலாளர், முருகன், உள்ளாட்சி பிரிவு ஒன்றிய தலைவர் மற்றும் நாகல்குளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாராயணன், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×