search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கோவிலூர் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி
    X

    திருக்கோவிலூர் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி

    • வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் சரகம் மேலந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் தினேஷ் (வயது 18). இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று அவருடைய மோட்டார் சைக்கிளில் மாலை 6.30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த அவர்கள் குடும்பத்தினர் தினேஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே ஊரில் அய்யனார் கோவில் அருகில் சாலை ஓரத்தில் மோட்டார் சைக்கிள் உடன் அடிபட்டு கீழே மயங்கி நிலையில் கிடந்தது கண்டு உடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவர் தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து மணலூர்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×