search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அட்மா ஆலோசனை குழு கூட்டம்
    X

    ஆலோசனை குழு கூட்டம் நடந்தது.

    அட்மா ஆலோசனை குழு கூட்டம்

    • உளுந்து மற்றும் பாசிப்பயறு விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
    • வேளாண்மை இடுபொருள் தயாரிக்கும் உத்திகள் போன்றவை அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை வட்டம், வோண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அட்மா திட்ட வட்டார விவசாய ஆலோசனை குழு மற்றும் வட்டார தொழில்நுட்ப குழு கூட்டம் மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையன் தலைமையில் நடைப்பெற்றது.

    இந்த கூட்டத்திற்கு துணை வேளாண்மை அலுவர் பிரபாகரன், பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ச. திருமுருகள் அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் தற்பொழுது ஆண்டிற்கான 2022-23 இரண்டாம் கட்ட நிதி இலக்கில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராம்களில் 80 விழுக்காட்டிற்கு மேல் இலக்கிளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

    மேலும் நடப்பு பருவத்திற்கு தேவையான உளுந்து மற்றும் பாசிப்பயறு விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் 50 சத மானியத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் வாங்கி பயன் அடையுமாறு கேட்டுக்கொண்டனர்.

    இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வேளாண்மை இணை இயக்குநரும், அட்மா திட்ட இயக்குநர் ஜெ.சேகர் பசுமை போர்வை திட்டத்தில் விவசாயிகள் அனைவரும் பங்கேற்க்க வேண்டும்.

    உழவன் செயலில் பதிவு செய்து மாரக்கன்றுகளை முன்னுரிமை அடிப்படையில் பயன் பெருமாறும் இயற்கை வேளாண்மை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

    இதற்கு தேவையான பயிற்சி மற்றும் இயற்கை வேளாண்மை இடுபொருள் தயாரிக்கும் உத்திகள் போன்றவை அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

    இக்குழு கூட்டத்தின் தலைவர் என்.இளையபெருமாள் கூறும் போது அரசு ஏராளமான நலதிட்டங்களை விவசாயிகளுக்கு வழங்கிவருகிறது.

    அந்த வகையில் தற்பொழுது முடிந்த வடகிழக்கு பருவமழையில் ஏற்ப்பட்ட பாதிப்புகளுக்கு உடனடியாக மாநிலத்திலே அதிகபடியான நிதியை நமது மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதல்வருக்கும் வேளாண்மை உழவர்நலத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கும் நன்றியை தெரிவித்தார்.

    குழு உறுப்பினர்கள் அனைவரும் வேளாண்துறையின் மூலம் செல்ப்படுத்தப்படும் திட்டங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    இக்கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம் மற்றும் அனைத்து சகோதரத்துறை அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

    நிறைவாக அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் விஜய் நன்றி கூறினார்.

    இக்கூட்டத்திற்க்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட தொழில்நுட்ப உதவி மேலாளர் மதுமனா செய்திருந்தார்கள்.

    Next Story
    ×