search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரவுடிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
    X

    ரவுடிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

    • கொலை முயற்சி வழக்கில் ரவுடிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது
    • அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது

    அரியலூர்,

    அரியலூர் அருகே தாமரைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து மகன் ரமேஷ் (வயது 24) என்பவருக்கும், ரவுடி வெங்கடேசனுக்கும் இடையே இடப் பிரச்னை தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதி அன்று தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், ரமேஷை அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டார்.இதுகுறித்து அரியலூர் நகர காவல் துறையினர் வழக்கு ப திவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், அனைத்து சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் குற்றவாளி சரவணனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து வெங்கடேசன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×