பாலியல் வன்கொடுமையை கண்டித்து திருப்பூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
பாலியல் வன்கொடுமையை கண்டித்து திருப்பூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

திருப்பூர்:

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பெண்க ளுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெய ராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேடை அமைக்க காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மழையில் நனைந்தபடி அ.தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போலீசார் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் தமிழக அரசுக்கு எதிராகவும் காவல்துறையினருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் வடக்கு அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி, என். எஸ். நடராஜன், சிவசாமி, மாநகர் மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வேல்குமார் சாமிநாதன், அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோக நாதன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான்,

முன்னாள் கவுன்சிலர் ஆண்டிப்பாளையம் ஆனந்தன், சூர்யா செந்தில், பகுதி செயலாளர்கள் பி.கே.முத்து, ஹரிஹரசுதன், குமார், கருணாகரன், மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழக நிறுவனத்தலைவர் இப்ராகிம் பாதுஷா உள்ளி ட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com