search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. பொய்க்குழு- ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பேட்டி
    X

    கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்.

    அ.தி.மு.க. பொய்க்குழு- ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பேட்டி

    • திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு பேசினர்.

    மதுரை

    திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவா ளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாநில இளைஞர் பாசறை இணைச்செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் முருகேசன், ராஜ்மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

    மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை கையில் வைத்துக்கொண்டு தாங்கள் தான் கட்சி என்று எடப்பாடி பழனிசாமி கருதுகிறார், ஆனால் அ.தி.மு.க.வின் உண்மையான ஒன்றரை கோடி தொண்டர்களை புறக்கணித்துவிட்டு பொதுக்குழுவில் எந்த முடிவுகள் எடுத்தாலும் செல்லாது.

    மதுரை மாவட்டத்தி லுள்ள 10 தொகுதிகளை சார்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசித்து இ.பி.எஸ்க்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

    பொதுக்குழு எந்த கட்சியை சேர்ந்தவர்கள் வேண்டுமானாலும் நடத்தலாம். அதற்கு நீதிமன்றம் அனுமதி தரும். ஆனால் பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்றால் ஒருங்கி ணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கையெழுத்திட்டால் தான் செல்லும். நடை பெற இருப்பது அ.தி.மு.க.வின் பொதுக்குழு அல்ல இ.பி.எஸ்.சின் பொய் குழுதான். கட்சியின் வளர்ச்சிக்காக சசிகலா மட்டுமல்ல, யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வார். அதற்கு தொண்டர்களும் ஒத்துழைப்போம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×