search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூரில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்
    X

    பூத் கமிட்டி நோட்டுகளை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ. வெளியிட்ட காட்சி. 

    வள்ளியூரில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்

    • ராதாபுரம் தொகுதியில் பூத் கமிட்டி பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
    • அ.தி.மு.க.வினருக்கு மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா அறிவுரைகள் வழங்கினார்.

    வள்ளியூர்:

    வள்ளியூரில் ராதாபுரம் தொகுதிக்கான அ.தி.மு.க. பூத்கமிட்டி ஆய்வுக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் இசக்கிசுப்பையா, ராதாபுரம் தொகுதியில் பூத் கமிட்டி பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதற்காக பணியாற்றிய அனைத்து அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். பின்னர் ராதாபுரம் தொகுதியில் உள்ள பூத் கமிட்டி நோட்டுகள் சரி பார்க்கப்பட்டு அ.தி.மு.க.வினருக்கு மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. அறிவுரைகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன், மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் சரவணன், முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பால்துரை, முன்னாள் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளருமான மைக்கேல்ராயப்பன், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் லாசர், மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் அம்மா செல்வகுமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை தலைவர் சுந்த ரேசன், மகளிரணி செய லாளர் ஜான்சி ராணி, வள்ளியூர் பொருளாளர் இந்திரன், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் பாலரிச்சர்ட்டு, ஞானபுனிதா, அருண் குமார், எட்வர்ட்சிங், நகர, கிளை செயலாளர்கள், தொண்டர்கள் பூத் கமிட்டி யின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடி வில் பா.ஜ.க., தி.மு.க. வை சேர்ந்த 10 பேர் அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர் முன்னிலையில் தங்களை இணைத்துகொண்டனர்.

    Next Story
    ×