search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாயர்புரத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
    X

    தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    சாயர்புரத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

    • அ.தி.மு.க. பூத்கமிட்டி அமைத்தல் குறித்த ஆலோசனை கூட்டம் சாயர்புரத்தில் நடந்தது.
    • முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.

    சாயர்புரம்:

    அ.தி.மு.க. ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றியம், சாயர்புரம் பேரூராட்சி இளைஞர், இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகள் ஏற்படுத்துதல், பூத்கமிட்டி அமைத்தல் குறித்த ஆலோ சனை கூட்டம் சாயர்புரத்தில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கினார். இதில் அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான ராஜேந்திரன் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆலோ சனைகள் வழங்கினார். முன்னதாக சாயர்புரம் நகர செயலாளர் துரைச்சாமி ராஜா வரவேற்றுப் பேசி னார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அழகேசன், நகர அவைத்தலைவர் ஜெயராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் சுதர்சன் ராஜா, சிவத்தையாபுரம் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பால்ராஜ், துணை தலைவர் சரவணக்குமார், ராஜு, ஸ்ரீவைகுண்டம் யூனியன் துணை தலைவர் விஜயன் மற்றும் சாயர்புரம் பேரூராட்சி வார்டு செய லாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், மகளிர் அமைப்பினர் மற்றும் நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×