search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் சுற்றும் மாடுகளை பிடித்து அடைக்க திருநீர்மலையில் புதிய இடம்
    X

    சாலையில் சுற்றும் மாடுகளை பிடித்து அடைக்க திருநீர்மலையில் புதிய இடம்

    • பிடிபடும் மாடுகள் காலியாக உள்ள மாநகராட்சி இடங்களில் கட்டி வைத்து அபராதம் செலுத்திய பின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
    • தாம்பரம், செம்பாக்கம் மண்டலங்களில் பிடிபடும் மாடுகளை மாடம்பாக்கம் பகுதியில் கட்டி வைத்து வருகின்றனர்.

    தாம்பரம்:

    சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்களும், உயிர்பலியும் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொ டர்ந்து சென்ைன மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரதான சாலைகளில் அதிக அளவில் மாடுகள் சுற்றி திரிந்து வருகின்றன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடு மீது மோதாமல் இருக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருப்பியபோது லாரியில் சிக்கி பலியானார். இதற்கிடையே சமீபத்தில் நடந்த தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தின்போது சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இதுபற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரப்படு த்தப்பட்டு உள்ளது. மேலும் அதன் உரிமையாளர்களுக்கு ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. பிடிபடும் மாடுகள் காலியாக உள்ள மாநகராட்சி இடங்களில் கட்டி வைத்து அபராதம் செலுத்திய பின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது. தாம்பரம், செம்பாக்கம் மண்டலங்களில் பிடிபடும் மாடுகளை மாடம்பாக்கம் பகுதியில் கட்டி வைத்து வருகின்றனர். தற்போது சுற்றி உள்ள பல இடங்களில் இருந்து அதிக அளவு மாடுகள் பிடிக்கப்பட்டு கொண்டு வரப்படுவதால் இப்பகுதியில் தற்போது இடநெருக்கடி ஏற்பட்டு உள்ளது. வரும் சில நாட்களில் மாடம்பாக்கம் பகுதியில் மாடுகளை கட்டி வைக்க இடம் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து பல்லாவரம், பம்மல் மண்டலங்களில் பிடிபடும் மாடுகளை திருநீர்மலைப் பகுதியில் அடைத்து வைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சாலையில் பிடிபடும் மாடுகளை அடைத்து வைக்கும் பகுதிக்கு கொண்டு செல்ல தனியாக புதிய வாகனங்களும் வாங்கப்பட உள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×