search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் வானவில் மன்ற கருத்தாளர்கள் கூட்டம்
    X

    வானவில் மன்ற கருத்தாளர்கள் கூட்டம்.

    அரசு பள்ளியில் வானவில் மன்ற கருத்தாளர்கள் கூட்டம்

    • வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிருந்தா தேவி தொடங்கி வைத்தார்.
    • மாணவர்களுக்கு எளிய முறை அறிவியல் சோதனைகளை செய்து மகிழ்வித்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட அளவிலான வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான கூட்டம் மற்றும் செயல்முறை விளக்கம் அம்மையப்பன் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் விஜயா தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ஆனந்தன், வானவில் மன்ற முதன்மை பயிற்றுனர் சங்கரலிங்கம், மேலராதாநல்லூர் பள்ளி தலைமையாசிரியர் சரவணராஜன், குடவாசல் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வானவில் மன்ற செயல்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிருந்தாதேவி தொடங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர் ரேவதி, மாவட்ட தலைவர் பொன்முடி, மகேந்திரன், சந்திரமோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.முன்னதாக பள்ளி அறிவியல் ஆசிரியர் அமுதா அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் பட்டதாரி ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார். விழாவில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வானவில் மன்ற கருத்தாளர்கள் மாணவர்களுக்கு எளிய முறை அறிவியல் சோதனைகளை செய்தும், மாணவர்களை செய்ய சொல்லியும் மகிழ்வித்தனர்.

    Next Story
    ×