உவரியில் கனிமவளம் கடத்திய 6 லாரிகள் பறிமுதல்-7 பேர் கைது

ராதாபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து ஜல்லி கற்கள், எம் சாண்ட் ஆகியவை தூத்துக்குடிக்கு கடத்தி செல்லப்பட்டது. மேலும் 6 லாரிகளையும் கனிமவளங்களுடன் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்.
பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்.
Published on

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் உவரியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இடையன்குடியில் சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த 6 கனரக லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. அவற்றை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது எந்த வித அனுமதியும் இன்றி ராதாபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து ஜல்லி கற்கள், எம் சாண்ட் ஆகியவை தூத்துக்குடிக்கு கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக லாரி டிரைவர்கள் ஆனைகுடி பெருமாள்புரத்தை சேர்ந்த சிவா (வயது 29) இடையன்குடி கீழத்தெரு ராஜன் (52), ரோஸ் மாநகர் தெற்குதெரு அமர்செல்வன் (41), சங்கராபுரம் வேத நாயகம்(51), நடுவ க்குறிச்சி செல்வ குமார்(32), தட்டார்மடம் வேதமாணிக்கம் ராஜி(46), லாரிைய வழிகாட்டி அழைத்து சென்ற செட்டிவிளை வடக்கு தெருவை சேர்ந்த ஜேசுராஜன் (52) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 6 லாரிகளையும் கனிமவளங்களுடன் பறிமுதல் செய்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com