search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜா எம்.எல்.ஏ. முன்னிலையில் ஓ.பி.எஸ். அணியினர் 50 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்
    X

    ராஜா எம்.எல்.ஏ. முன்னிலையில் ஓ.பி.எஸ். அணியினர் 50 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்

    • நிகழ்ச்சியில் சங்கர் மகாராஜன் உள்ளிட்ட சுமார் 50 பேர் தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.
    • தி.மு.க.வில் உள்ளவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமையும் என ராஜா எம்.எல்.ஏ. பேசினார்.

    சங்கரன்கோவில்:

    குருவிகுளம் ஒன்றியத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சுமார் 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் தங்களை இணைத்து கொள்ளும் நிகழ்ச்சி சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் முகேஷ் முன்னிலை வகித்தார். இதில் குருவிகுளம் ஒன்றியத்தை சேர்ந்த ஓ.பி.எஸ். அணியில் இருந்து மூர்த்தி, சரண், செல்வம், கார்த்தி, ராசு, முத்துராஜ், ராஜா, மணிகண்டன் இசக்கி பாண்டியன், வெள்ளத்துரை, ஜெயக்கொடி, கிருஷ்ணசாமி, சங்கர பாண்டியன், கார்த்தி, பிரகாஷ், சங்கர் மகாராஜன் உள்ளிட்ட சுமார் 50 பேர் ராஜா எம்.எல்.ஏ. முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

    அப்போது ராஜா எம்.எல்.ஏ. பேசுகையில், தி.மு.க.வில் இணைந்து உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. தி.மு.க.வில் கட்சி பணிகளில் முழு ஈடுபாடுடன் பணியாற்ற வேண்டும். தி.மு.க.வில் உள்ளவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமையும் என்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜராஜன், நகர துணை செயலாளர் சுப்புத்தாய், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×