கண்டெய்னர் யார்டில் மேலாளர் கொலையில் 5 பேர் கைது

பாலாஜி தனது நண்பர்களுடன் சேர்ந்து மேலாளார் சாய்பிரசாத்தை கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டெய்னர் யார்டில் மேலாளர் கொலையில் 5 பேர் கைது
Published on

திருவொற்றியூர்:

ஆந்திர மாநிலம் குடூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாய் பிரசாத் (வயது 45) இவர் கடந்த 5 ஆண்டுகளாக மணலி புதுநகர் அடுத்த விச்சூர், வெள்ளி வாயலில் உள்ள கண்டெய்னர் யார்டில் மேலாளராக வேலை பார்த்து வந்தார் சாய்பிரசாத்(வயது45). நேற்று முன்தினம் இரவு அவர் தங்கி இருந்த அறையில் சுத்தியலால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

விசாரணையில் அங்கு வேலை பார்த்து வந்த தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த டில்லி பாலாஜி கடந்த 6-ந் தேதி வேலை நேரம் முடிவதற்குள் பாதியிலே சென்று விட்டதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாலாஜியை மேலாளர் சாய்பிரசாத் வேலைக்கு வரவேண்டாம் என்று கூறி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பாலாஜி தனது நண்பர்களுடன்சேர்ந்து மேலாளார் சாய்பிரசாத்தை கொடூரமாக கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து பாலாஜி மற்றும் அவரது நண்பர்களான அங்கு வேலை பார்த்து வந்த முகிலன், பழைய நாபாளையத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி,ஷாம்,கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மணிமாறன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com