search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய 15-ந்தேதி கடைசி நாள்
    X

    விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய 15-ந்தேதி கடைசி நாள்

    • தேசிய மயமாக்கப்பட்ட வணிக வங்கிகள் ஏதேனும் ஒன்றில் பிரிமியம் செலுத்தி பயன் பெறலாம்.
    • திருமருகல் ஒன்றியத்தில் சம்பா, தாளடி சாகுபடி தொடங்கி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளதாவது:-

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் சம்பா,தாளடி சாகுபடி தொடங்கியுள்ளது.நெற்பயிர்களை இயற்கை இடர்பாடுகள், மழை,வெள்ளம் மற்றும் பூச்சி நோய் தாக்கப்பட்டால் விவசாயிகளை பாதுகாப்பதற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெல் பயிர்களுக்கு 2023-24 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு 1.5 சதவிகித பிரிமியத்தொகை ரூ.539 மட்டும் செலுத்தி விண்ணப்பம்,முன்மொழிவு படிவம்,வங்கி கணக்கு புத்தகம்,ஆதார் நகல்,சிட்டா அடங்கல் ஆவணம் ஆகியவற்றை வரும் 15-ம் தேதிக்குள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வணிக வங்கிகள் ஏதேனும் ஒன்றில் பிரிமியம் செலுத்தி பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×