

சென்னை:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் 4 ஆயிரத்து 58 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 537 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஆயிரத்து 485 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு மாநிலம் முழுவதும் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்கள் மாவட்ட வாரி விவரம்:-
அரியலூர் - 28
செங்கல்பட்டு - 84
சென்னை - 1,668
கோவை - 4
கடலூர் - 203
தருமபுரி - 2
திண்டுக்கல் - 24
கள்ளக்குறிச்சி - 50
காஞ்சிபுரம் - 31
கன்னியாகுமரி - 4
கரூர் - 2
கிருஷ்ணகிரி - 2
மதுரை - 46
நாகப்பட்டினம் - 1
நாமக்கல் - 26
நீலகிரி - 4
பெரம்பலூர் - 33
புதுக்கோட்டை - 1
ராமநாதபுரம் - 10
ராணிப்பேட்டை - 9
சேலம் - 10
தென்காசி - 38
தஞ்சாவூர் - 15
தேனி - 6
திருப்பத்தூர் - 2
திருவள்ளூர் - 46
திருவண்ணாமலை - 15
திருவாரூர் - 7
திருநெல்வேலி - 6
திருப்பூர் - 2
திருச்சி - 9
வேலூர் - 5
விழுப்புரம் - 128
விருதுநகர் - 16
மொத்தம் - 2,537