டெங்கு காய்ச்சல்: மத்திய-மாநில அரசை கண்டித்து வி.சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

டெங்குவை கட்டுப்படுத்த தவறிய மத்திய- மாநில அரசுகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டெங்கு காய்ச்சல்: மத்திய-மாநில அரசை கண்டித்து வி.சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
Published on

ஈரோடு:

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகம் உள்ளதால் பலர் தொடர்ந்து இறந்து வருகிறார்கள். மேலும் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்கு நோயை மத்திய-மாநிலஅரசுகள் கட்டுப்படுத்த தவறி விட்டன. அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்று கூறி அதை கண்டித்து இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ்நிறுத்தத்தில் டெங்குவை கட்டுப்படுத்த தவறிய மத்திய- மாநில அரசுகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமை தாங்கினார்.

மண்டல அமைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி, கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “கட்டுப்படுத்து கட்டுப்படுத்து டெங்கு நோயை கட்டுப்படுத்து”, “தடுத்து நிறுத்து தடுத்து நிறுத்து உயிர் பலியை தடுத்து நிறுத்து”போன்ற கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதில் மாநில மேலிட நெறியாளர் சிவசெல் லாண்டியப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com