அந்தியூர் அருகே டெங்கு நோய்க்கு பள்ளி சிறுமி பலி

கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அந்தியூரை சேர்ந்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
சிறுமி யாழினி
சிறுமி யாழினி
Published on

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூரை சேர்ந்தவர் வெங்கடேஷ் கூலித்தொழிலாளி. இவரது மனைவி பெயர் ராஜாத்தி.

இந்த தம்பதியினருக்கு யாழினி (வயது 6) என்ற மகளும், நிகிதன் (2) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

சிறுமி யாழினிக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. அந்தியூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாள். அப்போது சிறுமி யாழினிக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.

இதையொட்டி சிறுமியை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி யாழினி நேற்று இரவு பரிதாபமாக இறந்தாள்.

அவளது உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது.

இன்று சிறுமியின் உடல் அந்தியூருக்கு கொண்டு வரப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com