

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாம் ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக அப்போதைய மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய், அறிக்கை அளித்தார்.
இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தியது.
2018-ம் ஆண்டு இந்த வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி ஆகிய அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பில், சிபிஐ-யின் செயல்பாடுகளை நீதிபதி விமர்சித்திருந்தார். சிபிஐ தரப்பில் எந்த விதமான ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதேபோல், அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. பதில் மனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, வழக்கை வரும் அக்டோபர் 24-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.