காவிரி ஆணையம் குறித்து நிபுணர்களின் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும் - கர்நாடக முதல்வர்

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் குறித்து நிபுணர்களின் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #CauveryManagementAuthority #Kumaraswamy
காவிரி ஆணையம் குறித்து நிபுணர்களின் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும் - கர்நாடக முதல்வர்
Published on

பெங்களூரு:

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து அதை அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்களின் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி தமிழக அரசு தனது பிரதிநிதிகளை நேற்று நியமித்தது.

இந்த நிலையில் இதுகுறித்து முதல்-மந்திரி குமாரசாமியிடம் பெங்களூருவில் நேற்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இதுகுறித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதனால் கர்நாடகத்திற்கு ஏற்படும் சாதகங்கள் மற்றும் பாதகங்கள் குறித்து ஆராய வேண்டும். இதுகுறித்து நிபுணர்களின் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும். கர்நாடகத்தின் நலனை காக்க மாநில அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு குமாரசாமி கூறினார். #CauveryManagementAuthority #Kumaraswamy

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com