கடலூரில் வாலிபரை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது

கடலூரில் வாலிபரை கத்தியால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

கடலூர்:

கடலூர் அருகே மேற்கு ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் மகன் லட்சுமணன் (வயது 31) . இவருடைய வயலும், அவரது சித்தப்பா வேல்முருகன் (55) என்பவரது நிலமும் அருகருகே உள்ளது. இந்நிலையில் 2 பேருக்கும் பொதுவாக உள்ள மோட்டார் பம்பு செட்டில் இருந்து லட்சுமணன் தன்னுடைய வயலுக்கு அடிக்கடி தண்ணீர் பாய்ச்சி வந்ததாக தெரிகிறது. இதனால் வேல்முருகன் தன்னுடைய வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதில் ஆத்திரமடைந்த அவர் நேற்று முன்தினம் அவரது உறவினர் காசிநாதன் மகன் ராஜேஷ் (31) ஆகிய 2 பேரும் லட்சுமணனிடம் சென்று அவரிடம் தகராறு செய்தனர். பின்னர் 2 பேரும் சேர்ந்து அவரை கத்தியால் வெட்டினர். இதில் காயமடைந்த அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து லட்சுமணன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகன், ராஜேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com