

தமிழ் அமைப்புகள், சினிமா பிரபலங்கள் என சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி போராட்டங்கள் நடந்தன. போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் போலீஸ் தடியடி நடத்தினர். இதனை அடுத்து, சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த மீதமுள்ள 6 போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங் இடம்பிடித்துள்ளார். இவர் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே தமிழக ரசிகர்களை கவரும் வகையில் தமிழில் டுவிட் செய்திருந்தார். தற்போது சென்னையில் போட்டியில்லை என்பதால் மிகுந்த வருத்தம் அடைந்ததுள்ளார்.
சென்னையில் விளையாட முடியாதது குறித்து ஹர்பஜன் சிங் தனது டுவிட்டரில் ‘‘சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தது. பிற மண்ணில் களம் கண்டாலும், தமிழ் பாசமும்- நேசமும் துளியும் குறையாது. மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன், எங்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் தமிழ்நாடு ரசிகர்களிடம் இருந்து விடைபெறுகிறேன். வழக்கம்போல கீச்சுக்கள் தொடரும்.