

கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று கடலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு முதியவரை சோதனை செய்த டாக்டர் கொரானோ பாதிப்பு ஏற்பட்டிருக்குமா? என்ற சந்தேகம் நிலவியது.
இதனைத்தொடர்ந்து முதியவரை மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரானோ வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முதியவருக்கு ரத்த மாதிரி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்த முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. முடிவு வந்த பிறகு அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பது தெரியவரும்.