காண்ட்ராக்டர் செய்யாத்துரை இன்று விசாரணைக்கு ஆஜராக வருமான வரித்துறை நோட்டீஸ்

காண்ட்ராக்டர் செய்யாத்துரை இன்று விசாரணைக்கு ஆஜராக வருமான வரித்துறை நோட்டீஸ்

அரசு ஒப்பந்ததாரர் செய்யாத்துரை உள்ளிட்ட 15 பேர் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் சம்மன் அனுப்பி உள்ளது. #SPKgroup #ITRaid
Published on

சென்னை:

வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த அரசு முதல்நிலை காண்டிராக்டர் செய்யாத்துரையின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனை நடத்தினர்.

சென்னை, மதுரை மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.174 கோடி, 105 கிலோ தங்கம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்யாத்துரை மற்றும் அவருடைய மகன் நாகராஜ் ஆகியோர் 15-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. அதுதொடர்பான ஆவணங்கள் மற்றும் வங்கி லாக்கர் சாவிகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையடுத்து செய்யாத்துரை மற்றும் அவர் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்த வருமான வரித்துறை முடிவு செய்தது. அதன்படி, செய்யாத்துரை உளிட்ட 15 பேருக்கு வருமான வரித்துறை இன்று சம்மன் அனுப்பியது. 15 பேரும் இன்று மாலை சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #SPKgroup #ITRaid #IncomeTaxRaid

X

Maalai Malar
www.maalaimalar.com