

மத்திய அரசு சமீபத்தில் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை குறைத்தது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன்கேரா கூறியதாவது:-
நரேந்திரமோடி தலைமையிலான அரசு மீண்டும் அமைந்ததுபோல வரலாற்றில் வெகு சில அரசுகளுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் மோடி அரசு அதற்காக பெரும்பாலான மக்கள் முதலீடு செய்துள்ள சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை குறைத்து தண்டனை வழங்கியுள்ளது. வெற்றி தேடித்தந்த மக்களுக்கு அரசு வழங்கி இருக்கும் பரிசு இதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.