சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது

சேவல் சண்டை நடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

அந்தியூர்:

அந்தியூர் அருகே உள்ள புதுக்காடு கிழங்கு குழி ஏரிப்பகுதியில் சேவல் சூதாட்டம் நடப்பதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சிலர் சேவல் சண்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர்.

அவர்களில் அந்தியூரை சேர்ந்த சிவா என்கிற நல்ல சிவம் (வயது 38), அருள் மணிகண்டன் (29), முட்டை நிலையம் யுவச்சந்திரன் (29), கார்த்திக்ஷோபன்(28), ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (28), சேலம் 5 ரோடு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ரவி, கறிக்கடை ராசு, தவிட்டுப்பாளையம் பழனிச்சாமி, கிழங்கு குழி முனுசாமி, கரட்டூர் மணிகண்டன் ஆகிய 6 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கைதானவர்களிடம் இருந்து 2 சேவல் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தியூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com