தமிழக காவல்துறையில் ஆர்டலி முறை ஒழிக்கப்பட்டுள்ளது- முதலமைச்சர் பழனிசாமி தகவல்

தமிழக காவல்துறையில் ஆர்டலி முறை ஒழிக்கப்பட்டுவிட்டதாக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #OrderlySystem
தமிழக காவல்துறையில் ஆர்டலி முறை ஒழிக்கப்பட்டுள்ளது- முதலமைச்சர் பழனிசாமி தகவல்
Published on

சென்னை:

சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசும்போது கூறியதாவது:-

உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கின்ற அரசு தான் நல் அரசு. அமைதியான ஆட்சியை வழங்கும் அரசுதான் நல்லரசு என்று திருவள்ளுவர் கூறி இருக்கிறார்.

தற்போது தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள குறிப்பில், “தமிழ்நாட்டில் பல்வேறு குற்றங்கள் அதிகரித்து விட்டதாக” குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது காவல் துறையினர் மிகவும் மன அழுத்தத்துடன் இருக்கிறார்கள்.

ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக கூறப்பட்ட தமிழக போலீசார் இப்போது மன அழுத்தத்துடன் இருப்பதால்தான் குற்றங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 200 போலீசார் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

போலீசார் மன அழுத்தத்துடன் இருக்க முக்கிய காரணம் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்தது போல உயர் அதிகாரிகளிடம் பணிபுரியும் போலீசார் கொத்தடிமை போல நடத்தப்படுகிறார்கள்.

பெரிய அதிகாரிகளிடம் போலீசார் வீட்டு வேலை செய்யும் ‘ஆர்டர்லி’ முறை இன்னும் தொடர்கிறது.

இதுபோன்ற முறை இந்த ஆட்சியில் மட்டுமல்ல கடந்த தி.மு.க. ஆட்சியிலும் இருந்தது. இதை தவிர்க்க வேண்டும் என்று ஏற்கனவே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஆர்டர்லி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.

இதற்கு பதிலாக அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #OrderlySystem

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com