ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி பணி- முதலமைச்சர் ஆலோசனை

ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.70.54 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.24.24 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார். 15,605 பயனாளிகளுக்கு ரூ.72.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிப் பணிகள், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

* நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

* மீன்பிடி தொழிலும் ராமநாதபுரத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

* குடிமராமத்து திட்டம் மூலம் விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

* குடிமராமத்து பணிகளால் பருவகால மழைநீர் வீணாகாமல் ஏரிகளில் சேமிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com