கிறிஸ் லின் அதிரடி சதம்: முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது லாகூர் குவாலண்டர்ஸ்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கிறிஸ் லின் அதிரடியாக விளையாடி 113 ரன்கள் விளாச லாகூர் குவாலண்டர்ஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
கிறிஸ் லின்
கிறிஸ் லின்
Published on

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இன்று நடைபெற்ற 29-வது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் குவாலண்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற லாகூர் குவாலண்டர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான மொயீன் அலி மற்றும் ஜீஷன் அஸ்ரப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மொயீன் அலி 1 ரன்னிலும், அஷ்ரஃப் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத் 29 பந்தில் 42 ரன்களும், ரவி போபரா 33 ரன்களும் அடித்தனர். குஷ்தில் ஷா ஆட்டமிழக்காமல் 29 பந்தில் 70 ரன்கள் விளாச முல்தான் சுல்தான்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்தது.

பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற  இலக்குடன் லாகூர் குவாலண்டர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய பஹர் ஜமான் மற்றும் கிறிஸ் லின் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பஹர் ஜமான் 35 பந்தில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால் கிறிஸ் லின் ஆட்டமிழக்காமல் 55 பந்தில் 12 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 113 ரன்கள் அடிக்க 18.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 191 எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கராச்சி குவாலண்டர்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியது.

X

Maalai Malar
www.maalaimalar.com