சச்சின் ரன்களை அடித்து விளாசுவது போல் சவுகான் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார் - ராகுல் காந்தி

மத்தியப்பிரதேசத்தில் பயணம் செய்துவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கிரிக்கெட்டில் டெண்டுல்கர் ரன்களை அடித்து விளாசுவது போல் சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்புகளை அள்ளி வீசுகிறார் என குற்றம் சாட்டினார். #RahulGandhi #ShivrajSinghChouhan #SachinTendulkar
சச்சின் ரன்களை அடித்து விளாசுவது போல் சவுகான் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார் - ராகுல் காந்தி
Published on

போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் போபாலில் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

உங்கள் அனைவருக்கு சச்சின் டெண்டுல்கரை பற்றி தெரியும். அவர் களத்தில் இருந்தால் நிச்சயம் 50. 60, 70 முதல் 100 ரன்களை எடுத்துவிடுவார்.

அவரைப்போல், மத்தியப்பிரதேசத்தின் முதல் மந்திரி தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதுவரை 21 ஆயிரத்துக்கு  மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். ஆனால் அதனால் என்ன பயன்? ஒன்றும் நடக்கவில்லை.

மேலும், வேலை வாய்ப்பின்மை, பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் ஆகியவற்றில் மத்தியப்பிரதேசம் முதல் இடம் வகித்து வருகிறது என குற்றம் சாட்டினார். #RahulGandhi #ShivrajSinghChouhan #SachinTendulkar

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com