

சின்னமனூர்:
சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூர் பகுதியில் சின்னமனூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கண்மாய் பகுதியில் அதே ஊரை சேர்ந்த சின்னவர் மகன் கருப்பசாமி (வயது 22) அனுமதியின்றி டிராக்டரில் மண் அள்ளிக் கொண்டு இருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.