தங்கச் சுரங்கம் தோண்ட எங்களுக்கு முழுஉரிமை உள்ளது: சீனா சொல்கிறது

சீனாவின் இறையாண்மைக்கு சொந்தமான இடத்தில் தங்கச் சுரங்கம் தோண்ட எங்களுக்கு முழு உரிமை உள்ளது என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லூ காங் தெரிவித்துள்ளார். #China #GoldMine
தங்கச் சுரங்கம் தோண்ட எங்களுக்கு முழுஉரிமை உள்ளது: சீனா சொல்கிறது
Published on

இந்தியாவுக்கும், அண்டை நாடான சீனாவுக்கும் இடையே 3,488 கி.மீ. தூரத்துக்கு அசல்கட்டுப்பாட்டு கோடு எல்லை அமைந்துள்ளது. இதில் இந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேசத்தை தங்களது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தநிலையில் அருணாசலபிரதேச எல்லையையொட்டி லூன்சே என்னும் பகுதியில் சீனா அரசு தங்கச் சுரங்கம் தோண்டி வருகிறது. இங்கு சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு(சுமார் ரூ.4 லட்சம் கோடி) தங்கம், வெள்ளி மற்றும் இதர விலையுயர்ந்த உலோக தாதுக்கள் பூமிக்குள் இருப்பதாக ஹாங்காங்கில் வெளிவரும் ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ நாளிதழ் அண்மையில் தகவல் வெளியிட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com