நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை- சிபிசிஐடி தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருப்தபாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை- சிபிசிஐடி தகவல்
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் விற்பனை தொடர்பாக, விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் அமுதவள்ளி மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், புரோக்கர் அருள்சாமி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் விவரங்கள் குறித்த மாவட்ட சுகாதாரத்துறையின் அறிக்கை சிபிசிஐடியிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் விசாரணை நடத்த உள்ளனர். 

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 24 பெண் குழந்தைகள் மற்றும் 6 ஆண் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக சிபிசிஐடி போலீஸ் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com