ஒரு நாடு ஒரு தேர்தல் தற்போதைக்கு சாத்தியமில்லை - தலைமை தேர்தல் ஆணையர்

பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒன்றாக தேர்தல் நடத்துவது அடுத்தாண்டு சாத்தியமில்லை என தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார். #OneNationOneElection #ECI
ஒரு நாடு ஒரு தேர்தல் தற்போதைக்கு சாத்தியமில்லை - தலைமை தேர்தல் ஆணையர்
Published on

புதுடெல்லி:

மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்துவதற்கு பாஜக உள்ளிட்ட பல மாநில கட்சிகள் ஆதரவாக உள்ளது. தேர்தல் செலவுகள், மனிதவளம் ஆகியவை ஒரே தேர்தல் முறையில் குறையும் என இந்த திட்டத்தை ஆதரிக்கும் கட்சிகள் கூறுகின்றன.

ஆனால், மத்தியில் ஆட்சி கவிழும் பட்சத்தில் அனைத்து மாநில சட்டசபைகளையும் கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்துவீர்களா? என இந்த திட்டத்தை எதிர்பவர்கள் குரல் கொடுக்கின்றனர். திமுக, திரினாமுல், சிவசேனா, இடதுசாரிகள் என முக்கிய கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை எதிர்க்கின்றன.

இந்நிலையில், அடுத்தாண்டு பாராளுமன்றத்தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்தப்படுமா என தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சாத்தியமில்லை என பதிலளித்தார். முறையான சட்ட வரைவு இல்லாமல் தேர்தல் நடத்த முடியாது என அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com