சிகாகோ மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு - பெண் ஊழியர்கள் உள்பட 4 பேர் பலி

சிகாகோவில் உள்ள மருத்துவமனையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பெண் ஊழியர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். #ChicagoHospitalShooting
சிகாகோ மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு - பெண் ஊழியர்கள் உள்பட 4 பேர் பலி
Published on

அமெரிக்காவின் சிகோகா நகரில் உள்ள மெர்சி மருத்துவமனையின் கார் பார்க்கிங் பகுதியில் நேற்று புகுந்த ஒரு மர்ம நபர் திடீரென அங்கிருந்த ஒரு பெண்ணை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனைப் பார்த்த போலீசார் அந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பதில்  தாக்குதல் நடத்தினர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், ஒரு பெண்ணை குறிவைத்தே தாக்குதலை நடத்தியுள்ளார். அந்த பெண்ணுக்கும் அவருக்கும் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. ஆனால் கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் துப்பாக்கி சூட்டில் கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #ChicagoHospitalShooting

X

Maalai Malar
www.maalaimalar.com