ஈரோடு மாவட்டத்திலிருந்து சத்தியமங்கலம் வழியாக செல்லும் தமிழக அரசு பஸ்கள் நிறுத்தம்

நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் பொது வேலைநிறுத்தம் நடப்பதால் சத்தியமங்கலம், ஈரோட்டிலிருந்து கர்நாடகம் செல்லும் தமிழக அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன
தமிழக அரசு பஸ்
தமிழக அரசு பஸ்
Published on

ஈரோடு:

தனியார் மயமாக்கலை கண்டிப்பது, அன்னிய நேரடி முதலீட்டை எதிர்ப்பது என்பன உள்பட 12 அம்ச பொது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 10 மத்திய தொழிற்சாலைகள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து உள்ளன.

இந்த வேலைநிறுத்தப்போராட்டத்துக்கு பல்வேறு பொதுத்துறை வங்கி பணியாளர்கள் சங்கம், தேசிய வங்கி அதிகாரிகள் சங்கம் மற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினர் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.

இந்த வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் எச்சரித்திருந்தன.

எனினும் எச்சரிக்கையினை மீறி இன்று அறிவித்தது போல் வேலைநிறுத்தம் தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்திலும் மத்திய அரசு பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.

தொழிற்சங்கங்கள் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்து.

போராட்டத்தையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் ஈரோடு, கோபி, சத்தியமங்கலம் உள்பட முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி கர்நாடக மாநிலம் மைசூர், கொள்ளேகால், சாம்ராஜ்நகர் பகுதிகளிலிருந்து வரும். கர்நாடக மாநில அரசு பஸ்கள் நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டன.

இதேபோல் சத்தியமங்கலம், ஈரோட்டிலிருந்து கர்நாடகம் செல்லும் தமிழக அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன. சில பஸ்கள் இயக்கப்பட்டாலும் அவை இரு மாநில எல்லையான புளிஞ்சூர் வரை சென்று திரும்பி விடுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com