

பாராளுமன்ற மாநிலங்களவையில் சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டம் தொடர்பாக சசிகலா புஷ்பா எம்.பி. நேற்று பேசினார்.
பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு இருப்பது மத்திய அரசுக்கு தெரியுமா?, அந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதால் விவசாயிகள் சிலர் தற்கொலை செய்திருக்கிறார்கள் அதன் விவரம் என்ன? இந்த திட்டத்தை மறு பரிசீலனை செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? என அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
அதன் விவரம் வருமாறு:-
விவசாயிகள் தற்கொலை பற்றி இதுவரை எந்த தகவலும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை. பசுமை வழிச்சாலை தொடர்பாக மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த சாலை அமைக்கப்பட்டால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் பதில் அளித்து பேசினார். #ChennaiSalemGreenExpressway