ஆன்லைன் முறையில் ஆண்டுக்கு 2 தடவை நீட் தேர்வு - அறிவிப்பை வாபஸ் பெற்றது மத்திய அரசு

மருத்துவப்படிப்புக்கான நுழைவுத்தேர்வான நீட் ஆண்டுக்கு 2 தடவை ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #NEET #HRDMinistry
ஆன்லைன் முறையில் ஆண்டுக்கு 2 தடவை நீட் தேர்வு - அறிவிப்பை வாபஸ் பெற்றது மத்திய அரசு
Published on

புதுடெல்லி:

மருத்துவப்படிப்புக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்தது. மேலும், நீட் தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நீட், ஜேஈஈ, நெட் தேர்வு ஆகிய தேர்வுகள் நடக்கும் தேதிகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதில், நீட் தேர்வு அடுத்தாண்டு மே மாதம் 5-ம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வு ஆன்லைன் முறையில் இல்லாமல் பேப்பர், பேனா அடிப்படையிலேயே நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com