பெருந்துறையில் கார் - மொபட் மோதி விபத்து: ஓய்வுபெற்ற ஆசிரியர் பலி

பெருந்துறையில் கார் மீது மொபட் மோதியதில் தூக்கிவீசப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியர் பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர்.
பெருந்துறையில் கார் - மொபட் மோதி விபத்து: ஓய்வுபெற்ற ஆசிரியர் பலி
Published on

பெருந்துறை:

பெருந்துறை காடபாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 70). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் காடபாளையத்தில் விவசாயம் செய்து வந்தார்.

மேலும் தனது தோட்டத்தில் மாடுகள் வளர்த்து பால் கறந்து விற்பனையும் செய்து வந்தார்.

இன்று காலை இவர் தனது மொபட்டில் பால் எடுத்துக்கொண்டு பெருந்துறை வாவிகடைக்கு வந்தார். அந்த பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை அவர் கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வந்த கார், குப்புசாமி சென்ற மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குப்புசாமி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

பலியான குப்புசாமிக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com