

ஆக்லாந்து:
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ‘இது எங்களுக்கு கடினமான நாளாக அமைந்தது. முதல் ஆட்டத்தை ஒப்பிடும்போது ஆடுகளம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. 15 முதல் 20 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் இன்னும் கொஞ்சம் சவாலாக இருந்திருக்கும். ஆனால் எல்லா பெருமையும் இந்திய பவுலர்களையே சாரும். பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் மூன்றிலும் எங்களை தோற்கடித்து விட்டனர்.’ என்றார்.
நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் நிருபர்களிடம் கூறுகையில், நாங்கள் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆடுகளத்தன்மை மென்மெலும் வேகம் குறைந்து (ஸ்லோ) காணப்பட்டது. இதனால் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது. டாப்-4 வீரர்களில் யாராவது ஒருவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்வது அவசியமாகும். இந்திய வீரர்கள் சிறந்த பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி ஆட்டத்தை எங்களிடம் இருந்து தட்டிப்பறித்து விட்டனர். இதே போன்ற பார்ட்னர்ஷிப்பை எங்களால் ஏற்படுத்த இயலவில்லை. இந்திய பவுலர்கள் நன்றாக பந்து வீசினர். நிறைய பந்துகளில் ரன் எடுக்காமல் வீணடித்து விட்டோம். அது தான் இன்னிங்சில் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது’ என்றார்.