

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியின் போது ரூ.45,000 முதல் 59,000 கோடி வரை வர்த்தகம் நடந்துள்ளது. இதில் ஐதராபாத்தின் பங்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அது சுமார் ரூ.10,000 கோடியாக இருக்கலாம் என்று வர்த்தக வட்டாரங்கள் மதிப்பிட்டுள்ளன.
விநாயக சதுர்த்தி விழா நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. மூலைமுடுக்குகளிலெல்லாம் விநாயகப் பெருமான் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
அவரை அலங்கரிப்பதற்கும் வழிபடுவதற்கும் மண்டபங்கள், விளக்குகள், டிஜேக்கள், இசைக்குழுக்கள், கூடாரங்கள், மலர்கள், பழங்கள், பிரசாதங்கள் போன்றவை அவசியமாகின்றன. கணேஷ் ஆகமத்துடன் தொடங்கும் கொண்டாட்டங்கள், விசர்ஜனம் வரை தொடர்கின்றன.
அவை நகரத்தின் பொருளாதாரத்திற்குப் புத்துணர்வை அளிக்கின்றன. மங்களகரமான நிகழ்வுகள் அல்லது வர்த்தகங்களில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமல்லாமல், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கூடாரங்களை நடத்துபவர்களுக்கும் இவை பெரும் பலனை தந்துள்ளன.
மகாராஷ்டிராவிற்குப் பிறகு, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள்தான் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாகக் கொண்டாடி உள்ளனர்.
சில சந்தை மதிப்பீடுகளின்படி, நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியின் போது ரூ.45,000 முதல் 59,000 கோடி வரை வர்த்தகம் நடந்துள்ளது. இதில் ஐதராபாத்தின் பங்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அது சுமார் ரூ.10,000 கோடியாக இருக்கலாம் என்று வர்த்தக வட்டாரங்கள் மதிப்பிட்டுள்ளன.
நாம் பக்தியுடன் விநாயகப் பெருமானுக்குச் செலவிடும் ஒவ்வொரு ரூபாயும், அது நமக்கு நேரடியாக மன மகிழ்ச்சியைத் தந்தாலும் சரி, மறைமுகமாக சில லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது என்பது உண்மையே.
இந்த விநாயகர் சதுர்த்தியின் போது, இரண்டு லட்சம் பேர் நேரடியாகவும், நான்கு லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி என்பது ஒரு பக்திக் கொண்டாட்டம் மட்டுமல்ல, ஒரு பெரிய வணிக வாய்ப்பும் கூட என்றும் தெரியவந்துள்ளது.