

பெங்களூரு:
கர்நாடகா சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்-மந்திரி குமாரசாமி அரசு கவிழ்ந்தது. கர்நாடகாவில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.யாக உள்ள மகேஷ், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து அவரை நீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க கட்சி தலைமை உத்தரவிட்ட நிலையில், எம்.எல்.ஏ மகேஷ் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.