பும்ரா - போல்ட் ஜோடி அபாயகரமானதாக திகழும்: மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் நம்பிக்கை

ஐபிஎல் தொடரில் பும்ரா - டிரென்ட் போல்ட் ஜோடி அபாயகரமான ஜோடியாக திகழும் என்று மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.
ஜெயவர்தனே, டிரென்ட் போல்ட்
ஜெயவர்தனே, டிரென்ட் போல்ட்
Published on

ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் கொல்கத்தாவில் நடக்கிறது. இதற்கு முன் ஒவ்வொரு அணிகளும் தாங்கள் விரும்பும் வீரர்களை வெளியேற்றவும், மற்ற அணிகளில் இருந்து வாங்குவதற்கவுமான நடைமுறைக்கான காலக்கெடு கடந்த வாரம் முடிவடைந்தது.

இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்த டிரென்ட் போல்ட்-ஐ மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. டிரென்ட் போல்ட் பும்ரா உடன் இணைந்து பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஜோடி மிகவும் அபாயகரமானதாக இருக்கும் என்று மும்பை இந்தியன்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெயவர்தனே கூறுகையில் ‘‘ஜேசன் பெரெண்டர்ஃப் அணியில் வைத்து எப்படி செயல்படுத்துவது என்பது எங்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருந்தது. அவருக்குப் பதிலாக மாற்று வீரரை தேட வேண்டியிருந்தது. கடந்த முறை எங்களுக்காக பெரெண்டர்ஃப் சிறப்பாக விளையாடியிருந்தார்.

டெல்லி அணி டிரென்ட் போல்ட்-ஐ ரிலீஸ் செய்கிறது என்ற செய்தி வந்தபோது, அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர் என நாங்கள் உணர்ந்தோம். பும்ரா உடன் இணைந்து அவர் பந்து வீசினால், இந்த ஜோடி மிகவும் அபாயகரமானது’’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com