ஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்தில் குண்டுவெடிப்பு - இருவர் காயம்

ஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்து நாட்டின் இரு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் தடயம் சேகரிக்கும் போலீஸ்
குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் தடயம் சேகரிக்கும் போலீஸ்
Published on

பாங்காங்:

தாய்லாந்து நாட்டில் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்று உள்ளனர்.

இந்நிலையில், தாய்லாந்தில் இரு இடங்களில் சிறிய ரக குண்டுகள் வெடித்தன. இதில்  2 பெண்கள் காயம் அடைந்துள்ளனர் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர்கள் மாநாடு நடக்கும் நேரத்தில் தாய்லாந்தில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என போலீசார் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com