பீகாரில் என்ஆர்சி அமல்படுத்தப்பட மாட்டாது - சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

பீகார் மாநிலத்தில் என்ஆர்சி திட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என அம்மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
முதல் மந்திரி நிதிஷ்குமார்
முதல் மந்திரி நிதிஷ்குமார்
Published on

பாட்னா:

பீகார் மாநில சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல் மந்திரி நிதிஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, என்ஆர்சி திட்டத்தை அமல்படுத்த மாட்டோம். என்பிஆர் திட்டத்தை 2010-ம் ஆண்டு சரத்து படியே அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்) படிவங்களிலிருந்து 'சர்ச்சைக்குரிய உட்பிரிவுகளை' தவிர்க்க வேண்டும் எனக்கோரி மத்திய அரசுக்கு பீகார் மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com